search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீப திருவிழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
    • விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த 26-ந்தேதி 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபம் 11 நாட்கள் வரை காட்சியளிக்கும். இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பவுர்ணமி, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.

    இந்த ஆண்டு விடுமுறை நாளான நேற்று கோவிலை சுற்றி பொது தரிசனம் மற்றும் அம்மணி அம்மன் கோவில் வழியாக செல்லும் கட்டண தரிசன வரிசையில் கோவிலுக்கு வெளியே மதில் சுவர் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் . இதனால் நெரிசல் ஏற்பட்டது.

    கோவில் உட்பிரகாரங்களில் பக்தர்கள் இரவு 12 மணி வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.

    கோவிலில் சுற்றியுள்ள ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், மாட வீதிகள், கிரிவலப்பாதை, சின்னக்கடை தெருக்களில் டீ, குடிநீர் பாட்டில்கள் விற்பனை சூடுபிடித்தது.

    அதே போல் விடுமுறை நாளான இன்றும் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கொட்டும் மழையிலும் கோவில் வெளியே உள்ள சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    விடுதிகளில் ஆன்லைனில் மிக அதிக கட்டணங்களில் அறைகள் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.

    • கார்த்திகை தீப திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை யொட்டி சிவபெருமான் திரிபுரம் எரித்த புரா ணத்தின் அடிப்படையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறும். அதன்படி நேற்று கோவில் முன்பு மிகப்பெரிய சொக்கப்பனை உருவாக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாரதணை நடந்தது. இதன் பின் கிழக்கு கோபுரம் முன்புள்ள மண்ட பத்திற்கு சுவாமி-அம்மன் எழுந்தருளினர். கிழக்கு கோபுர வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனைக்கு கோவில் தலைமை குருக்கள் உதய குமார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    சொக்கப்பனை கொளுத் தப்பட்ட பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு 3-ம் பிர காரத்தில் வீதி உலா நடந்தது.

    ஏற்பாடுகளை துணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வர் பிரபாகரன் செய்தி ருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வனத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் சஞ்சீவி மலையில் குமாரசாமி கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் அமைக் கப்பட்டிருந்த தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் கோயில் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகன், சந்தான கிருஷ்ணன் மற்றும் கம்பத்து பெருமாள் கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.


    கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருச்சுழி திருமேனிநாதர்- துைண மாலை அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்ததையும், திடியன் மலை மீது கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் படத்தில் காணலாம்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருமேனிநாதர், துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலை களுக்கு மஞ்சணை, மஞ்சள், சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி, அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 15 அடி உயரத்திற்கு கோபுர வடிவில் சொக்கப்பனை உருவாக்கப்பட்டு அதற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பின்பு கொளுத்தப்பட்டது. திருச்சுழி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே குறிச்சியில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதில் பாலா பிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவில், சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவில் வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோவில், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவில்,

    தாய மங்கலம் அருகே உள்ள அலங்காரகுளம் சோனையா சுவாமி வைகைகரை அய்யனார் கோவில் ஆகிய கோவில்களி லும் கார்த்திகை மகா தீபத்தையொட்டி சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் மலையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பெரிய கொப்பரையில் கார்த் திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து மலை ே மல் உள்ள தங்கமலை ராமர் கோவில், அடி வாரத்தில் உள்ள கைலாச நாதர் சமேத பெரிய நாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.

    • அருப்புக்கோட்டை வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் உள்ள வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி காலையில் விக்னேஸ்வரர் பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் பால விநாயகர், வாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மறுநாள் (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் மகா தீபத்திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் “மகா தீபம்” ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான வருகிற 26-ந்தேதி கார்த்தி கை தீபத்திருவிழா கொண் டாடப்பட உள்ளது.

    இதை யொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியா குமரி அருகே பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்து உள்ள குமரியின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில் களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 26-ந் தேதி காலை பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கமும், அன்னதானமும் நடக்கிறது. மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும். 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண் கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திரு விழாவை கொண்டாடு வார்கள். வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கி றது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கிரிவல பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்போடும், ஆன்மிக மக்கள் எல்லாம் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடை பெற்றது என தமிழ்நாடு முதல் - அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் என கூறிய முதல் - அமைச்சர் கார்த்திகை தீபத்திருவிழா முடியும் வரை திருவண்ணாமலையில் தங்கி இருந்து பணிகளை கவனிக்க சொல்லி யிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் இன்று கிரிவலப்பாதையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதானமாக பார்க்கப்படுவது 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது தான். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் ஆன்மிக மக்கள் காலணி அணியாமல் கிரிவலம் வருகின்றனர்.

    அதனால் பாதைகள் அனைத்தும் தூய்மையாக வைக்கப்படும். 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் வருவதால் இரவு நேரங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து கிரிவல ப்பாதையில் கேமராக்கள் அமைக்க நிதிகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள். கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறு சிறு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாமல் தடுக்கவும் காவலர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் இந்த ஆண்டு ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் பா,முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, கோட்டப்பொறி யாளர் ராஜ்குமார், உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், அண்ணா மலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டாட்சியர் தியாகராஜன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், டாக்டர் சேஷாத்ரி, மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • 26-ந்தேதி நடக்கிறது
    • சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

    காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
    • 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

     

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

      26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர். 

    • கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு.
    • வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    கார்த்திகை தீப திருவிழா மிகப் பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை அகநானூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களில் நக்கீரர், அவ்வையார் போன்றோரின் பாடல்களால் அறிய முடிகிறது. சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானின் திருமயிலைத் திருப்பதிகத்திலும் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

    இவ்விழாவை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று தொடங்கி தினமும் வீட்டு வாசலில் வரிசையாக விளக்கேற்றி வைத்து தமிழ்நாடு முழுவதம் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு நடத்துபவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும் விளக்கு என்றாலே அதைத் தீபலட்சுமியின் அம்சமாகவே கருதி மங்களங்கள் பொங்கச் செய்யும் மாபெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். விளக்கின் ஜோதியில் நெருப்பு சிவபெருமான்; நெருப்பின் வெப்பம் அம்பிகை; ஒளி முருகன்; ஜோதி விஷ்ணுவும் சூரியனும் என்பது ஐதீகம்.

    இந்த தீபத் திருவிழா தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மற்ற எந்த தலத்திலும் இல்லாதபடி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மண் அகல் விளக்கை ஏற்றினால் வீரிய விருத்தி மிகும். இரும்பு அகல் கெட்ட சகவாசங்களை அகற்றும். வெண்கல விளக்கு பாபங்களைப் போக்கும். பித்தளை விளக்கிலும் தீபமேற்றலாம். எவர்சில்வர் விளக்கு கூடாது. வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    • மதுரை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திரு விழா நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறத்தில் மலை மீதுள்ள தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×